For Daily Alerts
Just In
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 4 பேர் பலி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இதயத்தூர் கிராமத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டுக் கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 4 பேர்இறந்தனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், இதயத்தூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஜல்லிக்கட்டுக் காளை முட்டி 4 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் பெயர் இளங்கோ (35), சிவலிங்கம் (34) என்று தெரிய வந்துள்ளது. காளை முட்டியதில் இறந்த மேலும் இரண்டு பேர்களின் பெயர், இதரவிவரங்கள் தெரியவில்லை.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, February 25, 2001, 5:30 [IST]