மாறனுக்கு உதவியவர் கைது
கோவை;
தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் மாறனுக்கு உதவியதாக அமிர்தலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் மாறன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி மலைப் பகுதியில் கைது செய்யப்பட்டு தற்போது சேலம் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின் போது மாறனுக்கு உதவி செய்ததாக பவானிப் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவரைப்போலீசார் கைது செய்தனர்.
இவரை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்ட அமிர்தலிங்கம், கோவை அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இது குறித்து அதிரடிப்படையினரிடம் கேட்டபோது, அவர்கள் அமிர்தலிங்கத்திற்கும் மாறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து எதுவும் கூறவில்லை.












Click it and Unblock the Notifications