ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் உயருமா?
டெல்லி:
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வழக்கமான சரக்கு கட்டண உயர்வோடு வேறு பல புதிய வருவாய் ஆதாரங்களும் இடம் பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது முறையாக திங்களன்று மக்களவையில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத் தேர்தலை மனதில்கொண்டு பயணிகள் கட்டணத்தை உயர்த்த விரும்பவில்லை.
எனினும், ரயில்வே வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான நிதி தேவையை சமாளிக்க புதிய வருவாய் ஆதாரங்கள் பற்றி பரிசீலித்து வருகிறார்.
பட்ஜெட் செலவினங்களை பொருத்த வரையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கன்னா கமிஷன் உள்பட பல கமிஷன்கள் தெரிவித்த யோசனைகள்நிறைவேற்றப்பட உள்ளன.
புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை காட்டிலும், ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டப்பணிகளை நிறைவேற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படஉள்ளது.
தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை அதன் திட்ட காலத்திற்குள் முடித்து கூடுதல் திட்ட செலவினை தவிர்க்க மம்தா பானர்ஜி அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளார்.
ரயில்வே துறையை தனியார்மயமாக்க ஒத்துக் கொள்ளாத பானர்ஜி ரயில்வேயின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதிப்பது குறித்துபட்ஜெட்டில் தெரிவிக்கலாம்.
கடும் பற்றாக்குறை ஏற்படக்கூடிய இந்த பட்ஜெட்டில் வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு அதிக ஒதுக்கீடு இருக்கக்கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.