திருவள்ளூர் கலவரம்: எம்.பி. மீது தாக்குதல்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற எம்.ஜி.ஆர்.கழக பொதுச் செயலாளர் ஜகத் ரட்கனை ஒரு கும்பல் தாக்கியது. அவர் சென்ற கார் மீது கல்வீச்சுநடந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த எம்.பி.யும்,எம்.ஜி.ஆர்.கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜகத் ரட்சகனைக் கும்பல் ஒன்று தாக்கியது. இதில் அவரது கார்கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
அவர் லேசான காயமடைந்தார் என்றனர்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மின் உற்பத்தித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்கலவரமாக மாறியது. இதையடுத்துப் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கூட்டஇடிபாடுகளில் சிக்கி ஒருவரும் பலியானார்கள். இச்சம்பவத்தில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றனர் .
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications