அடிப்படை உரிமைகள் குறித்து கைதிகளுக்குத் தெரிவிக்கப்படும்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

கைதிகள் தங்கள் அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்வதற்காக இலவச சட்ட உதவி சிறைச் சாலைகளில் அளிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இ.பத்மநாபன் தெரிவித்தார்.

பாண்டிச்சேரி சட்டத்துறை தலைவராகவும் உள்ள நீதிபதி இ. பத்மநாபன், பாண்டிச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கான இலவச சட்ட உதவி முகாமைசனிக்கிழமை தொடங்கி வைத்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.வெங்கடாசல மூர்த்தி, கைதிகள் தாங்கள் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்து கொள்வதோடுதாங்கள் சந்தித்துள்ள வழக்கு, அதன் தன்மை, மற்றும் அதனால் ஏற்படும் விளைவு குறித்தும் அறிந்து கொள்ள இந்த இலவச சட்ட உதவி முகாம்உதவும்.

தமிழகத்தில் மூன்று இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் இம்முகாம்களை புதுவையில் மேலும் பல இடங்களில் நடத்த புதுவை அரசுமுயற்சிக்க வேண்டும் என்றார்.

இம்முகாமின் போது கைதிகளுடன் பழகுபவர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட அரசு அனுமதிக்காது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுவை அரசுதலைமைச் செயலாளர் டி.டி.ஜோசப் தெரிவித்தார்.

பாண்டிச்சேரி தலைமை நீதிபதி ஓ.எம்.சந்திரசேகர் உள்ளிட்ட நீதிபதிகள் பலரும், போலீஸ் ஐ.ஜி. ஜே.பி.சிங், மற்றும் வக்கீல்கள் சங்க தலைவர் ஆலடிமகேந்திரன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+