என்ன ஆச்சு காற்றாலை திட்டம்?
சென்னை:
தமிழகத்தில், மின்வாரியத்துறை காற்றாலை மின்திட்டத்தை அமைக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறியகுற்றச்சாட்டு குறித்து தமிழக மின் வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநில மின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டம் குறித்து முதல்வர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் கண்ணப்பனும், கடந்த பிப்ரவரி 17ம் தேதி ஆலோசித்தார்கள்.
அப்போது தமிழ்நாடு மின்வாரியம் காற்றாலைத் திட்டத்திற்காக யூனிட்டுக்கு ரூ 2.25 செலவு செய்து, மின்சாரத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டது.
மேலும் மார்ச் மாதம் முதல் காற்றாலை மின் திட்ட மையத்தில் ஜெனரேட்டர்கள் உபயோகப்படுத்துவதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து பிப்ரவரி 18 ம் தேதி தமிழ்நாடு மின்வாரியத் தலைவரும், மத்திய அமைச்சர் கண்ணப்பனும் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள்.
இதையடுத்து மாநில அமைச்சர்கள் கூடி, காற்றாலைத் திட்டம் எப்போது தொடங்கும்? அதற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஆகியவைகுறித்தான அறிக்கைகள் வெளியாயின.
இந்த நிலையில் காற்றாலைத் திட்டத்தை உடனடியாகத் தொடங்காமல் தமிழக மின்வாரியத் துறை காலம் கடத்துகிறது என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன்கூறியிருப்பது வருத்தமடைய வைக்கிறது என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications