For Daily Alerts
Just In
கெளடா மனைவி மீது ஆஸிட் வீச்சு: முதல்வர் வருத்தம்
சென்னை:
கடந்த சில தினங்களுக்கு முன் ஹாசன் மாவட்டம் ஹார்டனஹள்ளியில் தேவ கெளடாவின் மனைவி ஆஸிட் வீசித் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர்கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் தேவ கெளடாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆஸிட் வீசி தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து மிகவும்வருத்தமடைகிறேன்.
தேவ கெளடாவின் மனைவி சென்னம்மா விரைவில் குணமடைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தேவ கெளடாவின் மனைவியும், அவரது மருமகள் பவானியும் அவர்களது உறவினரால் ஆசிட் வீசித் தாக்கப்பட்டனர். அவர்கள்பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, February 25, 2001, 5:30 [IST]