பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு தொடருமா?
பாண்டிச்சேரி:
அயோத்தியில் கோயில் கட்டுவோம் என பா.ஜ.க. தலைவர் பங்காரு லஷ்மண் கூறியுள்ளதால் இனிமேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பா.ஜ.க.வுடன்இணைந்து தேர்தலில் போட்டியிடுவாரா என தெரிவிக்க வேண்டும் என பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறினார்.
ஞாயிறன்று பாண்டிச்சேரியில் நிருபர் கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.க. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முயற்சித்தால் அடுத்த நிமிடமே பா.ஜ.க.கூட்டணியிலிருந்து விலகி விடுவோம் என கருணாநிதி முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று பா.ஜ.க.தலைவரான பங்காரு லஷ்மண், அயோத்தியில் கோயில் கட்டுவது, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்,மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்குவது என்ற மூன்று விஷயங்களில் பா.ஜ.க. உறுதியுடன் இருக்கும் எனதெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.தலைவரின் இப்பேச்சை கேள்விப்பட்ட பிறகும் தமிழகத் தேர்தலில் தி.மு.க. பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிடுகிறதா என்பதை தமிழகமுதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.