பாகிஸ்தானில் நிலநடுக்கம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.0 மற்றும் 6.7 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்படவில்லை.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உணரப்பட்டது.
நிலநடுக்கம் குறித்து டெல்லி பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தாக்கர், காபூல் பதாகஸான் மற்றும்பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.
ஜப்பானில் நிலநடுக்கம்:
ஞாயிற்றுக்கிழமை காலை ஜப்பானில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சிபா, டோக்கியோ, கனகாவா ஆகிய பகுதிகளில்4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications