இது பிரிந்தவர்கள் ஒன்று சேரும் நேரம்
கோவை
கோவையில் நடந்த போலீஸ் கமிஷனர் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பேசும்போது, இரண்டு ராதா கிருஷ்ணன்களைப் பாராட்டிப் பேசினார். ஒருவர் போலீஸ் கமிஷனர் கி. ராதா கிருஷ்ணன்.மற்றொருவர் எம்.பி., சி.பி. ராதாகிருஷ்ணன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.,ராதாகிருஷ்ணன், எம்.பி., பா.ஜ.,கட்சித் தொண்டர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வீடியோ படம் பிடிக்கச் சென்ற போலீஸ் போட்டோகிராபரைகட்சித் தொண்டர்கள் தாக்கியதாகவும், இதற்கு தூண்டுதலாக எம்.பி., ராதாகிருஷ்ணன் இருந்ததாகப் போலீசார்வழக்கப் பதிவு செய்தனர்.
இது போலீஸ் கமிஷனரின் கி. ராதாகிருஷ்ணனின் உத்தரவுப் படிதான் நடந்தது எனவும், அவரை கோவை நகரைவிட்டு மாற்ற வேண்டும் எனவும், எம்.பி.,ராதாகிருஷ்ணன் தீவிரமாக இருந்தார்.
இந்நிலையில் கோவை போலீஸ்கமிஷனர் அலுவலகத் திறப்பு விழாவில், சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.இந்த கமிஷனர் அலுவலகத்தைத் திறந்து வைத்த முதல்வர் கருணாநதி பேசும்போது,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால், சில அசம்பாவிதசம்பவங்கள் கோவையில் நிகழ்ந்தது என எனது செயலர்கள் கூறினர். அப்போது கோவைக்கு போலீஸ் கமிஷனராகயாரை நியமிக்கலாம் எனக் கேட்டேன்.
அதற்கு திருச்சியில் உள்ள போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை நியமிக்கலாம் எனக் கூறினேன். கோவைக்குச்செல்கிறாரா எனக் கேட்கச் சொன்னேன். அப்போது ராதாகிருஷ்ணன், அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால்செல்கிறேன் என்று கூறினார்.
உடனே நான் தேடிய ஆள் இவர் தான் என நினைத்து உடனே சென்னைக்கு அழைத்துப் பேசினேன். அப்போதுஒரு மாணவனைப் போல இருந்தார். சிறியவராகத் தோற்றமளித்தாலும் சிலையைச் செதுக்கும் "உளி இவர் தான்என நினைத்து கோவைக்கு அனுப்பினேன்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் மீது மக்களவை எம்.பி.,ராதாகிருஷ்ணனுக்கு வருத்தம் இருக்கலமே தவிர,இருவரும் நல்லவர்கள். ராதாகிருஷ்ணன் எம்.பி., போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனைப் பாராட்டிப் பேசியதில்இருந்தே அவர் எவ்வளவு நல்லவர் என உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications