அமெரிக்காவில் குளிர் காற்றுக்கு 9 பேர் பலிம்

Subscribe to Oneindia Tamil

போன்டோடோக் (அமெரிக்கா):

அமெரிக்காவில் உள்ள மிஸிஸிபியில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர்காயமடைந்துள்ளனர்.

இந்த சூறாவளிக் காற்றில் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது. மிஸிஸிபியில் திடீரென்று சனிக்கிழமைமாலை ஏற்பட்ட சூறாவளிக் காற்றால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன. 7 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் பல மாநிலங்களில் 130 கிலோமீட்டரில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. சில இடங்களில்சூறாவளிக் காற்றால் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்தியானா மற்றும் விஸ்கோன்சன் பகுதிகளில் ஏற்பட்டசூறாவளிக் காற்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அங்கு தொடர்ந்து கடும் குளிர்காற்று வீசுகிறது. குளிர்காற்று வீசும் மின்னசோட்டா, டகோட்டா, இவோவாபகுதிகளில் யாரும் செல்ல வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் குளிர்காற்று வீசி வருவதால் அங்கு தொடர்ந்து பனிமூட்டமாகக் காணப்படுகிறது. செயின்ட் பால், மற்றும்மினியாப்போலீஸ் பகுதிகளில் சாலைகளில் பனிமூட்டம் காணப்படுவதால் அங்கு செல்வது மிகவும் கடினமாகஉள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், தெற்கு டகோட்டா மற்றும் அதைச்சுற்றியுள்ள பலசாலைகளில் போக்குவரத்துத் திருப்பி விடப்பட்டுள்ளது என்றனர்.

மிகப் பெரிய சூறாவளிக் காற்றாலும், கடும் பனியாலும் சிகாகோவில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.இதனால் சில விமானங்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன.

சூறாவளிக் காற்றால் 30 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் டியூப்பேலோவிலுள்ளமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெக்ஸாஸ், அர்கன்ஸாஸ் பகுதிகளில் பல வீடுகள் சூறாவளிக்காற்றால் சேதமடைந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+