8 குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை
கார்வார்:
கணவனின் முரட்டுத்தனத்தால் தன் 8 குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்சுசீலா என்ற பெண். அதிரிச்சி தரும் இந்த துயர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடகா, கார்வார் மாவட்டம், அங்கோலா தாலுகா, குண்டபாளா கிராமத்திலிரக்கும் மரக்காலுமஜ்ரேயில் வசித்துவந்தவர் கணபதி குசலப்பா என்னும் கச்சு நாயக். இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்.
இவரது மனைவி சுசீலா (45). இவர்களுக்கு மீனாட்சி (25), தாரா(21), பிரம்மா (19), மீரா (16), சசிகலா ஸ்ரீ14),ஜோதி (12), என்று 6 மகள்களும், ஸ்ரீகாந்த் (23), கிரண் (8) என்ற 2 மகன்களுமாக 8 குழந்தைகள் உள்ளன.,
கச்சு நாயக் மீது ரெளடி செயல்களிலும், அடி தடி செயல்களிலும் ஈடுபட்டதாக பல வழக்குகள் உள்ளன.இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் வாசுதேவ் நாயக் என்பவருடன் தகராறு செய்து அவரது கையைவெட்டி விட்டார். இதனால் கச்சு நாயக் கைது செயய்ப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்த பின்னரும் விடாமல் கச்சு நாயக் வாசுதேவிடம் தகராறு செய்தார். இதனால் வருத்தமடைந்தசுசீலா குழந்தைகளுடன் தர்மஸ்தலா சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்தார். ஆனாலும் கச்சு நாயக்மாறவில்லை.
மிகவும் மன வேதனையடைந்த சுசீலா தன் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளமுடிவெடுத்தார்.
சுசீலா, மீனாட்சியையும், ஸ்ரீகாந்தையும் கல்காவளி ஆற்றில் தள்ளி கொலை செய்தார். தாராவையும், கிரணையும்ஆற்றுக்கு அருகே தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார். சுசீலாவுடன் பிரம்மா, மீரா, சசிகலா ஜோதி ஆகியோர்விஷம் குடித்து இறந்தனர்.
தன் குழந்தைகளுடன் கலந்து பேசிய பின்பே சுசீலா இந்த வேதனை தரும் முடிவுக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications