For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு தலைக் காதலால் இருவர் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

எட்டயாபுரம் (தூத்துக்குடி):

என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கட்டாய தாலி கட்டுவேன் என்று வாலிபர் ஒருவர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் இளம்பெண்.

பெண் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தவுடன் பயந்துபோன் அந்த வாலிபரும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தக் கொடுமை தூத்துக்குடி அருகே உள்ள எட்டயாபுரம் பகுதியில் நடைபெற்றது.

எட்டையபுரம் அருகே தலைக்காட்டுபுரத்தை சேர்ந்த சங்கையா என்பவரின் மகள் காளீஸ்வரி. சம்பவத்தன்று வயல் காட்டிற்கு களை எடுக்க சென்றவரைஅவ்வூரைச் சேர்ந்த முத்தையாத் தேவரின் மகன் சுப்பையா, வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையெனில் கட்டாய தாலிகட்டுவேன் என்று கூறினார்.

இது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் அவமானமடைந்த காளீஸ்வரி ஊரின் தெற்குப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரின் தற்கொலை பற்றி அறிந்ததும் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சுப்பையாவும் ஊரின் கிழக்கு பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்.இச்சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X