பிரான்சில் குஜராத் பூகம்ப நிவாரண நிதி வசூலிக்கும் தமிழர்கள்
பாரிஸ்:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரான்சில் வாழும் தமிழர்கள் நிதி வசூல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் சொந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பை உணர்ந்திருக்கின்றனர் பிரான்சில் வாழும் மக்கள்.
இங்குள்ள தமிழர்களில் பெரும்பாலோர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள். இவர்கள் குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதிதிரட்டுகின்றனர்.
லான்ட்ரிசி நகரில் பிறந்து பிரான்சின் காலனிப் பகுதியான பாண்டிச்சேரியில் கவர்னராக இருந்தவர் துய்ப்ளக்ஸ் என்பவர். இவரின் முயற்சியால் பிரான்ஸ்,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிலப்பகுதிகளை கைப்பற்றியது.
பாண்டிச்சேரி கவர்னராக இருந்த போது கர்நாடகவின் மைசூர் பகுதியை ஆண்ட திப்பு சுல்தானுடன் இணைந்து பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து வந்தார். லான்ட்ரிசிநகரமும் பாண்டிச்சேரியும் இரட்டை நகரங்களாக பிரான்ஸில் கூறப்படுகிறது.
லான்ட்ரிசி நகர தமிழர்கள் குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்காக நடத்தும் கலை நிகழ்ச்சிக்காக அரங்கம் ஒன்றைஇலவசமாக அளித்துள்ளது அந்நகர நிர்வாகம்.
இந்நிகழ்ச்சியில் இசைக்கலைஞர் இஷாக் அலியின் சிதார் இசையும், பிரான்ஸ் நடனக்கலைஞர் மதுலிகாவின் கதக் நடன நிகழ்ச்சியும் இடம் பெறும்.
இந்நிகழ்ச்சியையொட்டி நகர் முழுவதும் சென்று நிவாரண நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மா என்ற அமைப்பு நிதி வசூலிப்பிற்கானதொண்டர்களை ஏற்பாடு செய்துள்ளது.
இதனிடையே, பாரீஸில் உள்ள இந்திய சமுதாயத்தை சார்ந்தவர்கள் பூகம்ப நிவாரண நிதியாக இதுவரை 35 லட்ச ரூபாய் திரட்டியுள்ளதோடு மேலும் 7 லட்சரூபாய் அளவிற்கு நிதி திரட்ட உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications