தேர்தல் கூட்டணி: மார்ச் 1 ல் இறுதி முடிவு: ஜெ.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தமாகா வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது, தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்து மார்ச் 1 ம் தேதி இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஹைதராபாத் செல்லுமுன் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்கள்தான் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பதில் கூறவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். தோழமை கட்சிகளுடன் மனம்திறந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
தமிழ் மாநில காங்கிரசுக்கு 35 தொகுதிகள் கொடுப்பதாக அறிவித்துள்ளோம். அதே நேரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வர வேண்டும்என்றார் ஜெயலலிதா.
ஆனால், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தமாகா கட்சிகள் இணைந்து போட்டியிடுவது என ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் அழகிரி தமிழகத்தில் 3 வது அணி அமைப்பதுதான் நல்லது என்று கூறியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.