புதிய திட்டங்கள் இல்லாத பட்ஜெட்
டெல்லி:
இந்த ஆண்டில் ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், இப்போது அமலாக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு 45 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் புட்டபர்த்தி-பெனுகுண்டா இடையிலான ரயில் பாதை அமைப்புப் பணி முடிவடையும். இது தவிர ஹைதராபாத்தில் புறநகர்ரயில்களின் (சப்-அர்பன் ரயில்கள்) சேவையை அதிகரிக்க ஆந்திர அரசுடன் ரயில்வேத்துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கபுர்தலா ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வியட்நாம் நாட்டிலிருந்து 72 மீட்டர் கேஜ் ரயில் பெட்டிகள் தயாரிக்க ஆர்டர்கிடைத்துள்ளது. வாரணாசியில் உள்ள ரயில் என்ஜின் தொழிற்சாலைக்கு இலங்கை, வங்காள தேசத்திலிருந்து 12 டீசல் என்ஜின்கள் தயாரிக்கஆர்டர் கிடைத்துள்ளது.
ரயில்வே மியூசியம்:
வாரணாசி மற்றும் மால்டாவில் மண்டல ரயில்வே கண்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன. தென்னக ரயில்வேயின் கீழும் ஒருகண்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்.