இண்டர்நெட் மூலம் டிக்கெட் பதிவு
டெல்லி:
ரயில்வே துறை சார்பில் தனியாக ஈ-காமர்ஸ் தொழில் பிரிவு தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி ரயில்வேபட்ஜெட்டில் அறிவித்தார்.
ரயில் பாதைகளை ஒட்டி நாடு முழுவதும் பிராட்பாண்ட், மல்டி மீடியா வலையமைப்பை ரயில்வேயின் ரயில் டெல் அமைப்புஉருவாக்கி வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் 62,800 கி.மீ. தூரத்துக்கு இந்த வலையமைப்புஉருவாக்கப்படும்.
அதே போல செலவைக் கட்டுப்படுத்தவும், சிக்கன நடவடிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதன்மூலம்மட்டும் இந்த ஆண்டு ரூ. 850 கோடி மிச்சப்படுத்தப்படும்.
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர் கிடைக்கவும், பிளாட்பாரங்களை நீட்டிக்கவும், உயரத்தைக் கூட்டவும்,பிளாடாபாரங்களின் மேலே கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இண்டர்நெட் மையங்கள் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். ரயில்வேதுறையை நவீனமயமாக்க சாம்பிட்ரோடா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.