மேயர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர மேயரும், தமிழக முதல்வரின் மகனுமான ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளதாக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுதெரிவித்தார்.
இது குறித்து கட்சி கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பாலு தெரிவித்ததாவது:
ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய அரசு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்டாலின் தன் மகன் என்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிப்பது முதல்வர் கருணாநிதிக்கு தர்ம சங்கடமாக இருக்கலாம். ஆனால் போலீசார் இந்தவிஷயத்தில் கவனமாக நடந்து கொண்டு ஸ்டாலினுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தி.மு.க.வினர் ஸ்டாலினை பொதுக் கூட்டங்களுக்கு அழைக்கும் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் கட்சி தொண்டர்கள் ஸ்டாலினுக்கு மிகஅருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications