கோவை குண்டுவெடிப்பு வழக்கு ஒத்திவைப்பு
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கு மார்ச் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா, மக்கள் ஜனநாயககட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானி உள்ளிட்ட 166 பேர் கோவை தனிநீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர்.
எனினும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மற்றும் பிஸ்லால் ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை.
இதனையடுத்து வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தணிகாசலம் வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஐயப்பன், காஜா ஹூசைன் மற்றும் சபீர் ஆகியோர் தங்களுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லைஎன்பதால் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி மனு செய்துள்ளனர்.
மதானியை விடுதலை செய்யக் கோரி கேரளாவிலிருந்து கோவைக்கு மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள் ஊர்வலம் வருவதை முன்னிட்டு கடும்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.