For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோட்டை கலக்கும் முகமூடிக் கும்பல்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு அருகே அதிகாலையில் கொள்ளையடித்துச் சென்ற முகமூடிக் கொள்ளையர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

ஈரோடு திண்டல் அருகே உள்ள சாண்டிநகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (49). இவர் விவசாயம் செய்துவருகிறார். இவரது மனைவி சந்தோசம் (42), மகன் ராஜா (21), சங்கர் (18) ஆகியோருடன் இரவில் வீட்டில் படுத்துதூங்கிக் கொண்டிருந்தார்.

திங்கள்கிழமை அதிகாலையில் முகமூடி அணிந்த சிலர், அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்தநாய் குரைத்துள்ளது. இந்த சத்தம் கேட்டவுடன் முகமூடி அணிந்த கொள்ளையர்கள், நாயைக் கண்ட துண்டமாகவெட்டிப் போட்டனர்.

இதைக் கண்ட தட்சிணாமூர்த்தி அவசர அவசரமாக போலீசாருக்குப் போன் செய்ய முயன்றார். அப்போதுஅவர்கள், போன் வயரை அறுத்து இணைப்பைத் துண்டித்தனர். கதவை தாளிட்டு தப்பிக்க முயன்றார்தட்சிணாமூர்த்தி.

ஆனால் கொள்ளையர்கள் விடவில்லை. அம்மிக் கல்லைத் தூக்கிப் போட்டு கதவை உடைத்தனர். பின்னர், அவரதுமகன்கள் அணிந்திருந்த மோதிரம் உள்பட 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச்சென்றனர்.

தட்சிணாமூர்த்தி இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X