எதியோபியாவில் அமைதி ஏற்படுத்த தயாராகிறது இந்திய படை
டெல்லி:
ஐ.நா.அமைதி காக்கும் படையில் உள்ள இந்திய வீரர்கள் மிகவும் பதட்டமான பகுதிகளான எதியோபியா மற்றும்எரிடெரியாவுக்கு மார்ச் 6 அல்லது 7 ம் தேதி செல்லவுள்ளனர் என்று இந்திய ராணுவ துணைத் தலைவர்லெப்டினன்ட் ஜெனரல் விஜய் ஒபேராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.நா.அமைதி காக்கும் படையில் உள்ள 318 இந்திய வீரர்கள் கலவரம் நடக்கும்எதியோபியா மற்றும் எரிடெரியா பகுதிகளுக்கு விரைவில் செல்லவுள்ளனர்.
எதியோபியா மற்றும் எரிடெரியா செல்லும் அவர்கள் மிகவும் தோழமை உணர்வுடன் செயல்பட்டு அங்குஅமைதியை நிலைநாட்ட முயற்சி எடுப்பார்கள்.
ஏற்கனவே பல முறை ஐ.நா. அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் உலக அளவில் கலவரம் நடந்துகொண்டிருக்கும் பல நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். அமைதிஏற்படுத்துவதற்காக இந்த முறை எதியோபியா மற்றும் எரிடெரியா செல்லும் இவர்கள் தங்களது முயற்சியில்வெற்றி பெறுவார்கள் என நம்பலாம்.
இந்திய அமைதி காக்கும் படையினர் மார்ச் 6 அல்லது 7 ம் தேதி ஆப்பிரிக்கா செல்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, எதியோபியாவுக்கும், எரிடெரியாவுக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக சண்டை நடந்துவருகிறது. அங்கு அமெரிக்க அமைதி காக்கும் படையினர் சென்று அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில்இறங்கியுள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை எதியோபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி திட்டத்தின்முதல் கட்டமாக நாங்கள், எரிடெரியாவிலுள்ள எங்களது வீரர்களை வாபஸ் வாங்கி விட்டோம் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.