தமிழகத்தில் ஒரே நாளில் சட்டசபைத் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை துணை தேர்தல் கமிஷனர்கள் சுபாஷ் பாணி மற்றும் சையான் சாட்டர்ஜி ஆகியோர்செவ்வாய்க்கிழமை கூறினார்கள்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தலைமை துணை தேர்தல் கமிஷனர்கள் சுபாஷ் பாணி மற்றும்சையான் சாட்டர்ஜி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிப்பது எனத் திட்டமிட்டுள்ளோம். தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தைப்பயன்படுத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். இது குறித்து 10 மாவட்டக் கலெக்டர்களுடனும் ஆலோசனை நடத்தினோம்.

தற்போது நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைநடத்தினோம். மிகுந்த தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் ஏற்கனவே 7 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளது. மேலும் தமிழகத்துக்காக 63, ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்த வகையில் அடையாள அட்டை வழங்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. இதுவரை 68.3 சதவீதம் அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது.

அடையாள அட்டை வழங்கப்படுவதில் சிறு சிறு தவறுகள் நடந்து வருவதாகப் புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்என்றார்கள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+