விசாகப்பட்டினம் மியூசியத்தில் நீர்மூழ்கிக் கப்பல்
டெல்லி:
1971 ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த சண்டையில் உறுதுணை புரிந்த, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமானஐ.என்.எஸ் க்ருசூரா நீர்மூழ்கிக் கப்பல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம்விசாகப்பட்டினத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
கடற்படை முன்னாள் தலைவர் அட்மிரல் வி.எஸ்.ஷேகாவட், க்ருசூரா நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டினஅருங்காட்சியகத்தில் வைத்தார்.
இதுகுறித்து இந்தியக் கடற்படை செய்தித்தொடர்பாளர் ராகுல் குப்தா கூறியதாவது:
ஆந்திர மாநிலத்தில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும் விசாகப்பட்டினம். இங்குள்ள அருங்காட்சியகத்தில் க்ரூசூராநீர்மூழ்கிக் கப்பல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கிக்க கப்பல் கடற்படை ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் வைத்து சில மாற்றங்கள்செய்யப்பட்டு மீண்டும் வடிவமைக்கப்பட்ட பின் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எஸ். க்ரூசூரா 1969 ம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தநீர் மூழ்கிக் கப்பல் போர்க்காலங்களில் மிகவும் உறுதுணை புரிந்துள்ளது. சுமார் 31 வருடங்கள் தரம் வாய்ந்த,சிறந்த நீர் மூழ்கிக் கப்பலாகச் செயல்பட்டுள்ளது.
1971 ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரின் போது இது திறம்படசெயல்பட்டது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான அனைத்து நீர்மூழ்கிக்க கப்பலும் விசாகப்பட்டினத்தில் தான் உள்ளன. மேலும்ஐ.என்.எஸ் விர்பா, ஐ.என்.எஸ் சாத்வாகனா ஆகியவகையும் விசாகப்பட்டினத்திலேயே உள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications