த.மா.கா. 3 வது அணி அமைக்க முடியாது: சபாநாயகர்
மதுரை:
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்க முடியாது என தமிழகசட்டசபை சபாநாயகரும், மூத்த தி.மு.க. தலைவருமான பழனிவேல் ராஜன் கூறியுள்ளார்.
பழனிவேல் ராஜன் 70-வது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை அவர் கொண்டாடினார். அப்போது அவர்நிருபர்களிடம் கூறுகையில், நான் த.மா.கா. பொதுச் செயலாளர் அழகிரியுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைநடத்தினேன்.
ஆனால் மூப்பனார் அழகிரிக்கு கூட்டணி குறித்து விவாதிக்க எந்த அதிகாரமும் கொடுக்கப்பட்வில்லை. அவர்அதற்காக நியமிக்கப்படவில்லை என கூறியது அவர் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய முடிவெடுத்து விட்டார்என்பதை காட்டுகிறது.
திருமாவளவன் தலைமையிலான இந்திய விடுதலை சிறுத்தை கட்சியும், கண்ணப்பன் தலைமையிலான மக்கள்தமிழ் தேசம் கட்.சியும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணையும் என நம்புகிறேன் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications