ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி
இட்டாநகர்:
கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி காணாமல் போன இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும்உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த எம். ஐ 8 ரக ஹெலிகாப்டர் கடந்த பிப்ரவரி 26 ம் தேதி அருணாச்சலப் பிரதேசம் வழியே சென்று கொண்டிருந்த போது திடீரென்று காணாமல்போனது.
பின்னர் அது சுபான்சிரி மாவட்டம் சிரோ என்ற இடத்தில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிரோ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விழுந்துகிடந்த ஹெலிகாப்டரை அடையாளம் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, சிரோ கிராமத்திலுள்ள உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திருக்குச் சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடந்தஹெலிகாப்டரை பார்த்தனர். பின்னர் விமானப்படை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் இருந்த பைலட் ராஜூ, பன்வார், இன்ஜினியர் ஒருவர் மற்றும் 3 பேரும் உயிரிழந்து விட்டனர் என்று அஞ்சப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடலைத் தேடும் பணியில், மத்திய புறக்காவல் படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான காலநிலை காரணமாக அடர்ந்த காட்டுக்குள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.