சோனியாவுடன் ஜெயந்தி நடராஜன் ஆலோசனை
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான ஜெயந்தி நடராஜன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைச் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்தார்.
புதன்கிழமை இரவு டெல்லி சென்ற அவர் சோனியாவை வியாழக்கிழமை சந்தித்தார். தமிழகத்தில் அரசியல் கூட்டணி மற்றும்அதில் நிலவும் சிக்கல்கள் குறித்து அவர் சோனியாவிடம் விளக்கினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில், தமாகாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சிக்கல் நீடிக்கிறது. தொகுதிப் பங்கீடுமற்றும் பாண்டிச் சேரி குறித்து காங்கிரஸ் தரப்பில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயந்தி நடராஜன் சந்திப்பைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் விரைவில் சென்னைவந்து மூப்பனார் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications