தமிழர் கட்சி வருத்தம்: சிங்களர்கள் மகிழ்ச்சி
கொழும்பு:
லண்டனில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பது வருத்தமடைய வைக்கிறது என்று இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் கூறியுள்ளன.
புலிகளுக்கு இங்கிலாந்து தடை விதித்திருப்பது குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் சம்பந்தன் கூறுகையில்,
இலங்கையில் அமைதி ஏற்படுத்தி புலிகள், அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், இங்கிலாந்து புலிகள் இயக்கத்துக்குத்தடை விதித்திருப்பது துர்திர்ஷ்டவசமானது.
இந்தத் தடை எந்நேரத்திலும் நீக்கப்படலாம். தடை விதிக்கப்பட்ட போதிலும் புலிகள், தங்களது அமைதி முயற்சியைக் கைவிட்டு விடக் கூடாது.
இலங்கையில் நார்வே தூதுக் குழுவினரின் உதவியுடன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான ஆயத்தம் நெருங்கி வரும் இந்த நேரத்தில், விடுதலைப் புலிகள்இயக்கத்தை சர்வதேச தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்று இங்கிலாந்துக்கு வலியுறுத்திய பல தமிழர் கட்சிகளில் டி.யூ.எல்.எஃப்.பும்ஒன்று என்றார்.
சிங்கள கட்சிகள் மகிழ்ச்சி:
தேசியவாத சிங்கள உருமாய கட்சி தலைவர் திலக் கருணாரத்னே, புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து தடை விதித்திருப்பது எங்களை மகிழ்ச்சியடையவைக்கிறது.
இருப்பினும் லண்டனில் உள்ள புலிகளின் தலைமையகம் மூடும் வரை நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கத் தீர்மானித்துள்ளோம். புலிகளால்எங்களுக்குப் பல விதங்களில் பிரச்சனைகள் ஏற்டலாம் என்றார்.
முன்னதாக, சிங்கள உருமாய கட்சியினர் ஏற்கனவே, லண்டனில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் முன் போராட்டம் நடத்தி, புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிக்கக் கோரி, தூதரக அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தனர்.
இதற்கிடையே, ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத்தடை சட்டத்தை இங்கிலாந்து பின்பற்றும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
முன்னதாக, கடந்த மாதம் லண்டன் சென்றிருந்த இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, இங்கிலாந்து அரசிடம், புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கவேண்டும். மேலும் அதனால் இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்றார்.
இலங்கை, இந்தியா, அமெரிக்காவுக்குப் பிறகு புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்த நாடுகள் வரிசையில் 4 வதாக இடம் பெற்றுள்ளது இங்கிலாந்துஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications