4 மாநிலங்களுக்கு ஏப்ரல் 2 வது வாரம் தேர்தல்
திருவனந்தபுரம்:
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம்இரண்டாவது வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில்வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் அளித்த பேட்டி:
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல்ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் யாரும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே 21 ம் தேதியுடன் முடிவடைகிறது. பாண்டிச்சேரியில் வாக்காளர்அடையாள அட்டை வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. நான்கு மாநிலங்களிலும் வாக்காளர்அடையாள அட்டை வழங்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டிலும், கேரளாவில் கண்ணூ
ஊழல் குற்றங்களில் தொடர்புடைய ஒருவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். இதற்கானசட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அவர்கள் அதைச் செய்வார்கள்என்று நம்புகிறோம்.
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து திருத்தியமைக்கும்.அப்போது இறந்தோரின் பெயர்கள் பட்டியிலில் இருந்து நீக்கப்படும்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் கில் கூறினார்.
யு.என்.ஐ.