சென்னையில் புதிய சுற்றுலா அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து வார இறுதி விடுமுறைப் பயணம் ஒன்றை தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடுசெய்துள்ளது.
வண்டலூர் விலங்கியல் பூங்கா, கோலவாய் ஏரி, மாமல்லபுரம், வேடந்தாங்கல், மேல் மருவத்தூர், காஞ்சிபுரம்,திருத்தணி ஆகிய இடங்களுக்குச் செல்லும் வகையில் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா செல்ல விரும்பும் பயணி ஒருவருக்கு தலா ரூ. 525 கட்டணமாகும். உணவு, தங்குமிடம்,போக்குவரத்து வசதி ஆகியவை இதில் அடங்கும்.
ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சுற்றுலாப் பயணம் இருக்கும் என்று சுற்றுலாவளர்ச்சிக் கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications