பிரான்சில் அணுமின்உலை விபத்து
பாரிஸ்:
பிரான்சின் அணுமின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கதிர்வீச்சு பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்பால், அங்கிருந்தநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஊழியர்களுக்கு எந்த தீங்கும் நேராததோடு சுற்றுப்புற பகுதிகள் கதிர்வீச்சால்பாதிக்கப்படவில்லை என பிரான்சைச் சேர்ந்த எலக்ட்ரிசிடே தே பிரான்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜெர்மன் மற்றும் லக்ஸம்பர்க் நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள தியோன்வில்லே, என்ற இடத்தில், கேட்டினோம்என்ற அணுமின் நிலையத்தின் ரியாக்டர்களை பராமரிக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் அணுக்கதிர்வீச்சு கசிவு குறித்து சோதனை செய்ததில் எத்தகைய கதிர்வீச்சுகளும்சுற்றுப்புறத்தில் காணப்படாததால், இச்சம்பவம் ஒரு விபத்தாக சர்வதேச அணுமின் நிலைய ஆபத்துகள் குறித்தபுத்தகத்தில் இடம் பெறப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications