இனி த.மா.கா.வுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசுடன் இனி எந்த விதமான பேச்சுக்கும் இடமில்லை என தமிழக முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், த.மா.கா பொதுச் செயலாளர் அழகிரியுடன் தி.மு.க.வின் மூத்த தலைவர்பழனிவேல் ராஜனும், சென்னை நகர மேயர் ஸ்டாலினும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் அதிகார பூர்வமானதல்ல. சாதாரணமானதுதான் என த.மா.கா. தரப்பில் கூறப்பட்டது. இனி த.மா.கா.வுடன்தேர்தல் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சு வார்த்தைக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன.
இனி, ஊழலற்ற, நியாயமான அரசு வேண்டுமா அல்லது ஊழல் அரசு வேண்டுமா என முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான்.
இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியில் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications