மீண்டும் சேலம் சிறையில் மாறன்
சேலம்:
தடா நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் செல்லப்பட்ட மாறன், மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரப்பன் கூட்டாளியான தமிழர் விடுதலைப் படை தீவிரவாதி மாறன், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிறுவாணி மலைப் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கடும் பாதுகாப்புடன் சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் சேலம்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மிகவும் பாதுகாப்பு பகுதி எனக் கருதப்படும் சிறைப் பகுதியில் மாறன் அடைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரப்பன் கூட்டாளியான அமிர்தலிங்கம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள காடுகளில் அதிரடிப்படையினர் நடத்திய வேட்டையில் வீரப்பன் கூட்டாளியான அமிர்தலிங்கம்கைது செய்யப்பட்டார். இவரைப் போலீசார் சனிக்கிழமை காவல் நீட்டிப்பிற்காக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.












Click it and Unblock the Notifications