செக் மோசடி: தொழிலதிபருக்கு சிறைத் தண்டனை

Subscribe to Oneindia Tamil

கோவை:

திருப்பூரில் 4. 65 லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்து மோசடி செய்ததாக தொழிலதிபருக்கு இரண்டு ஆண்டு ஜெயில்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூரில் சாயப்பட்டறை தொழிலதிபர் வருபவர் சக்திவேல் பாண்டியன் (43). கருவம்பாளையத்தில்சாயப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடமிருந்து தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த தவமணி என்ற பாபு (30),கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 3, 34, 499 ரூபாயை கடனாக வாங்கினார்.

இதன் பின்னர் இரண்டாவது தவணையாக 1,30, 464 ரூபாய் வாங்கினார். இந்த பணத்தைத் திருப்பிச் செலுத்த 98ம்ஆண்டு மே மாதம் 3 செக்குகளைக் கொடுத்தார். இந்த செக்குகள் அனைத்தும் வங்கிக் கணக்கில் பணம் இல்லைஎனக் கூறி திரும்பி வந்தன.

இதனையடுத்து மீண்டும் தவமணி பாபு, 2 செக்குகளைக் கொடுத்தார். இந்த செக்குகளும் திரும்பி வந்தன. எனவே,இது குறித்து சக்திவேல் பாண்டியன், போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சக்திவேல் பாண்டியனுக்கு அளிக்க வேண்டிய தொகைக்குப் போலியாக செக்கொடுத்து மோசடி செய்ததற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், மேலும், 2 செக்குகளைக் கொடுத்துமறுபடியும் ஏமாற்றியதற்காக கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். பணத்தை திருப்பிச்செலுத்த தவறினால் , மீண்டும் 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு திருப்பூர் நகரில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+