நிலக்கரி ஊழல்: நீதிமன்றத்தில் ஜெ.அப்பீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மற்றும் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு ஆகியவற்றின் விசாரணையை கீழ்நீதிமன்றங்கள் விசாரிக்க தடை கோருகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் தெரிவித்துள்ள தகவல்கள்:

தற்போதைய அரசு தன்னை பழி வாங்கும் நடவடிக்கையாக இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு பதிவு செய்துள்ளது. அரசு தரப்பின் நடவடிக்கைகள்சட்டத்தை மீறுவதாக உள்ளதோடு, தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எனது பெயருக்கு களங்கம் விளைவித்துஅரசியல் ஆதாயம் தேட விழைகிகிறார்.

பல வக்கீல்களை அரசு தரப்பில் வாதாட தினசரி கட்டணத்தில் நியமித்து மக்களின் வரிப்பணத்தை தேவையற்ற வகையில் வீணடிக்கிறது அரசு.

தனக்கு ஆதரவாக இருக்கும், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பதவியிலிருந்தவர்கள் பலரின் மீதான வழக்குகளை கைவிட்டுள்ளதோடு என் மீதும் என்னைசார்ந்திருப்பவர்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு வழக்குகளை தொடுக்கிறார் கருணாநிதி.

மேலும், சாட்சிகள் பலரை துன்புறுத்தி எனக்கு எதிராக வாக்கு மூலங்களை எழுதி வாங்கியுள்ளனர் அரசு தரப்பினர்.

அரசியல் எதிரி என்பதற்காக சட்டத்தை எந்தவொரு குடிமகனையும் துன்புறுத்தக் கூடாது. எனவே, அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையான இத்தகையவழக்குகளை கீழ்நீதி மன்றங்கள் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+