காங். இல்லாத அ.தி.மு.க கூட்டணி?
கோவை:
தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத அ.தி. மு.க கூட்டணி அமைப்போம், அல்லது 3 வது அணி அமைப்பது உறுதி என தேசியவாத காங்கிரஸ் கட்சி திவாரிபிரிவு அறிவித்துள்ளது.
கோவையில் தேசியவாதக் காங்கிரஸ் திவாரி பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஜி.பி சாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
தமிழ் மாநில காங்கிரஸ் 3 வது அணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும், நாங்கள் 3வது அணி அமைப்பது உறுதியாகி விட்டது. இது குறித்துமூப்பனாருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவரும் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார். மேலும்திருமாளவன், ஏ.சி சண்முகம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அ.தி.மு.க.,அணியில் இடம்பெறுவதென்றால், அங்கு காங்கிரஸ் இருக்கக் கூடாது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு 14 மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களில்வெற்றி வாய்ப்பு அதிகள்ள தொகுதிகளை கண்டறிந்து அதில் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.கோவையில் சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் சிதம்பரத்தில் நடந்த பொதுக் குழுவில் கூட்டணி ஆட்சிதான் என தீர்மானம்நிறைவேற்றினர். ஆனால், இப்போது தொகுதிகளின் எண்ணிக்கைக்காக பேரம் பேசுவதன் மூலம் அந்ததீர்மானத்திற்கு சமாதி கட்டி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications