For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொகுதிப் பங்கீடு: கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க, தி.மு.க. ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தமிழகத்தின் இரு பெரும்கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடுகுறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஹைதராபாதிலிருந்து ஞாயிற்றுக்கிழமைசென்னை திரும்புகிறார். அவர் திங்கள்கிழமை தோழமை கட்சிகளுடன் தொகுதிபங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார்.

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் தம்பிதுரை தலைமையில் அமைந்துள்ள தேர்தல்பணிக்குழு தோழமைக் கட்சிகளுடன் அதிகாரமற்ற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.இறுதி முடிவு ஜெயலலிதாவால் அறிவிக்கப்படும்.

திங்கள்கிழமை மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஜெயலலிதாதொகுதி பங்கீடு குறித்து பேசுவார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 20 தொகுதிகள் வேண்டும் என தொகுதிகள் பட்டியல்அளித்துள்ளது, அவர்கள் தற்போது வெற்றி பெற்றுள்ள 8 தொகுதிகள் வேண்டும் எனகேட்டுள்ளனர். அவர்களுக்கு 8 முதல் 12 தொகுதிகள் தரப்படலாம் எனகூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 40 தொகுதிக்கானபட்டியலை கொடுத்துள்ளது. அவர்களுக்கு 7 முதல் 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம்என கூறப்படுகிறது.

அ.தி.மு..க. அணியில் இணைந்துள்ள பா.ம.க. வும் விரைவில் ஜெயலலிதாவைசந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறது. அப்போது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிதொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும். தொகுதி பங்கீடு குறித்துமுடிவெடுக்க பாட்டாளி மக்கள் கட்சி தங்கள் தலைவர் ராமதாசுக்கு முழு உரிமைகொடுத்துள்ளது.

தி.மு.க.:

தி.மு.க. தலைவரும், முதல்ருமான கருணாநிதி மதுரையிலிருந்து வந்ததும் தொகுதிபங்கீடு குறித்து தோழமை கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரியவந்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., ம.தி.மு.க., த.ரா.கா, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.,எம்.ஜி.ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, புதிய தமிழகம், மனித உரிமைகள்கழகம், தமிழர் பூமி, தமிழ்நாடு தேசிய முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க. அணியில் இடம்பெறும் சாத்தியக்கூறு உள்ளது.

தி.மு.கவில் தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் அமைசர்கள்ஆர்க்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தோழமைக் கட்சிகள் இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும். இறுதி முடிவுகருணாநிதியால் எடுக்கப்படும்.

தி.மு.க.சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து மனுக்கள்பெறப்பட்டு வருகிறது இது இந்த மாதம் 5-ம் தேதி வரை நடைபெறும்.

பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும். அதன் பின்னரே வேட்பாளர்பட்டியல்தயாராகும்.

கூட்டணிக் கட்சிகளுடன் பேசிய பின்பு தான் வேட்பார் பட்டியல் வெளியாகும்.தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எங்கள் தேர்தல் பணிதொடங்கிவிட்டது என தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

த.மா.கா:

இன்னும் த.மா.காவும்,காங்கிரசும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் யோசித்துக் கொண்டே............. இருகிறார். அவருடன்இணைந்து காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X