நடுத்தெருவில் த.மா.கா
சென்னை:
அரசியலில் நண்பன் அல்லது எதிரி என்று இரண்டே பிரிவு தான். இரண்டுக்கும் நடுவே என்ற பிரிவே கிடையாது.
எனக்கு கருணாநிதியும் நண்பர், ஜெயலலிதாவும் அரசியல் சினேகிதி என்று கூறிக் கொண்டிருந்த மூப்பனாருக்கு இருவருமேசேர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்கள். முதலில் த.மா.காவுக்கு 40 இடம் தருகிறோம் என்று கூறிய கருணாநிதி, மூப்பனார்ஜெயலலிதாடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டு மூப்பனாருக்கு கதவை மூடினார்.
ஆனால், ஜெயலலிதாவோ மூப்பனாருடன் ஒரு பக்கம் பேசிக் கொண்டே அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மூப்பனாருடன்பேச பல தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்த ஜெயலலிதா திடீரென ஹைதராபாத் சென்றார். திரும்பி வந்த கையோடு ராமதாஸைமட்டும் அழைத்துப் பேசினார்.
மூப்பனார், அவரது தோளில் ஏறி அமர்ந்திருக்கும் காங்கிரஸ் இருவருக்குமே எனது கூட்டணியில் இடமில்லை. பா.ம.கட்சியுடன்தான் கூட்டு என்று ராமதாஸை விட்டே அறிவித்துவிட்டு போயஸ் தோட்டத்து கதவை பூட்டிக் கொண்டுவிட்டார்.
யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல், நடு நிலையில் இருந்தால், அ.தி.மு.க, தி.மு.க. இருவருமே நான் அதிக சீட்தருகிறேன் என்று போட்டி போட்டுக் கொண்டு நம்மிடம் வருவார்கள் என எதிர்பார்த்தார் மூப்பனார்.
நடு நிலை வகித்த அவரை நடுரோட்டில் விட்டுவிட்டனர் கருணாநிதியும், ஜெயலலிதாவும்.
இப்போதும் கூட தி.மு.க. வீட்டுக் கதவை ஒரு முறை தட்டிப் பார்க்கலாம் என்பதே ப. சிதம்பரம் போன்ற த.மா.காங்கிரஸ்தலைவர்களின் எண்ணம். இதற்கு ரஜினியும் கூட உதவலாம். சிதம்பரத்தை விட்டே தி.மு.கவுடன் மூப்பனார் பேரம் பேசினாலும்ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அப்படி ஒரு நிலை வந்தால், காங்கிரசை த.மா.கா. ஜெயா ஸ்டைலில் தூக்கி எறிய வேண்டியிருக்கும். தி.மு.க. கூட்டணியில்காங்கிரஸ் இடம் பெறுவது இயலாத காரியம்.
தி.மு.க. கதவுகள் திறக்கப்படாவிட்டால், மூன்றாவது அணியை அமைப்பது தவிர த.மா.காவுக்கு வேறு வழியே இல்லை. தி.மு.க.,அ.தி.மு.கவில் இடம் கிடைக்காத காங்கிரஸ், குட்டிக் குட்டிக் கட்சிகள், சாதிக் கட்சிகள் என ஒருவர் விடாமல் எல்லோரும் இந்தக்கூட்டணியில் இடம் பெறுவார்கள்.