பாஸ்வான் கட்சியின் துணிச்சல்!
சென்னை:
ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி தமிழக சட்டசபைத் தேர்தலில் அ னைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகஅறிவித்துள்ளது.
பாஸ்வான் சமீபத்தில் துவக்கிய கட்சிதான் லோக் ஜனசக்தி. இப் போதுதான் பிறந்த இந்தக் கட்சி தனித்துத் தேர்தலைச் சந்திக்கும் அளவுக்கு துணிந்துவிட்டது. இக்கட்சியின் மாநிலத் தலைவர் தம்பிக் கோட் டை ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சென்னையில் கடந்த மாதம் எங்களதுகட்சியின் மாநில அளவிலான மாநாடும், பேரணியும் நடந்தது. அப் போது எங்களது பலத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்து கொண் டோம். மக்களுக்கும்உணர்த்தி னோம்.
இதன் வி ளைவாக வரவிருக்கும் சட்டச பைத் தேர்தலில் அ னைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள் ளோம். 16-ம் தேதி முதல்வேட்பாளர் தேர் வைத் தொடங்கவுள்ளோம். என வே கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 16-ம் தேதிக்குள் தங்களது வேட்பாளர்விண்ணப்பங்க ளை கட்சித் த லைமையகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.