குன்றக்குடி அடிகளாருக்கு மணிமண்டபம்
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் ரூ 28 லட்சம் செலவில் குன்றக்குடி அடிகளாருக்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதல்வர் கருணாநிதி வரும் 12ம் தேதி திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் கலெக்டர் மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக அரசின் சார்பில், குன்றக்குடியில் ரூ 28.57 லட்சம் செலவில் குன்றக்குடி அடிகளாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அடிகளார் சிலை ரூ 3.5 லட்சம் செலவில் சென்னையில் ஜெகநாத சிற்பி என்பவரால் உருவாக்கப்பட்டது. வியாழக்கிழமை சிலை தியான மண்டபத்தில்வைக்கப்படும்.
தியான மண்டபம் முழுவதும் அடிகளார் பல்வேறு தலைவர்களுடன் இருந்த புகைப்படங்கள் வைக்கப்படும்.
முழுவதும் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தின் மேல் தளத்தில் அடிகளார் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் அடங்கிய நூலகம்அமைக்கப்பட உள்ளது.
குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தை வரும் 12 ம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். விழாவில் அமைச்சர்களும்,குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications