சென்னை - பெங்களூர் விமானத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னையிலிருந்து பெங்களூர் கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வியாழக்கிழமைதொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையப் போலீசார் கூறியதாவது:
வியாழக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசியவர், சென்னையிலிருந்து பெங்களூர்செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறவுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நாங்கள் மோப்ப நாய்ப்படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச்சென்றோம். விமானம் முழுவதும் சோதனை செய்ததில் அதில் வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்றும், அது வெறும் புரளி என்றும் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதமாக சென்றது. தாமதமாகச் சென்றவிமானத்தில் 121 பயணிகள் சென்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications