எஸ்.எஸ். சந்திரன் மீது தாக்குதல் .. ஜெ. கண்டனம்
சென்னை:
அ.தி.மு.க பேச்சாளர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீதான தாக்குதல் குறித்து அ.தி.மு.கபொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் புதன்கிழமை இரவு, நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுக் கூட்டத்தில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்குஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முறையாக,அனுமதி பெற்று நடந்த கூட்டத்தில் தி.மு.க ரெளடிக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.அதை போலீஸார் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர்.
எஸ்.எஸ்.சந்திரன் உள்பட பலர் மீது வெறித்தனமாக தாக்குதல் நடந்தபோது,பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அமைதியாக கைகட்டி நின்று கொண்டிருந்ததுவெட்கக் கேடானது, கண்டிக்கத்தக்கது.
இதுகுறித்து எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தஅ.தி.மு.க.வினருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications