ஈவ் டீசிங் .. ரயில்களில் சிறப்புப் படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரயில்களில் பெண்களை கேலி செய்வோரைப் பிடிக்க மகளிர் போலீஸார்அடங்கிய சிறப்புக் குழுக்களை ரயில்வே போலீஸ் அமைத்துள்ளது.
சென்னையில் பீச் முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்களில் பெண்களைகேலி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து இவர்களைப் பிடிக்க மாறுவேடத்தில்போலீஸார் ரயில்களில் கண்காணித்தனர்.
இதில் கடந்த வாரம் மட்டும் 625 பேர் பெண்களைக் கேலி செய்ததாக பிடிபட்டனர்.இவர்களில் 14 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களிடமிருந்து 1 லட்சத்து 23ஆயிரத்து 35 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தற்போது மின்சார ரயில்களில் மாறு வேடத்தில் சிறப்புப் போலீஸ் படைஅனுப்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் பெண் போலீஸார் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications