லண்டனில் தமிழ் அகதிகளுக்கு புதிய பிரச்சனை
லண்டன்:
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால், இலங்கையிலிருந்து இங்கிலாந்தில் தஞ்சம் புகும் தமிழர்களின் எண்ணிக்கையும்குறையும் என்று தெரிகிறது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருவதால் அப்பகுதியில் வாழும்மக்கள் அகதிகளாக இங்கிலாந்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது, இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு அகதிகளாகச் செல்லும் மக்களின்எண்ணிக்கை மிகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து குடியேற்றத்துறை அதிகாரி கூறுகையில், இங்கிலாந்தில் குடியேற வரும் இலங்கை அகதிகளுக்கு இனிமேல் இடம் கிடைப்பதுவெகு அரிது. இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்றார்.
இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
1989ம் ஆண்டிலிருந்து 1999ம் ஆண்டு வரை 19,740 பேர் இலங்கையிலிருந்து, இங்கிலாந்துக்குக் குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள்.
1999ம் ஆண்டு இலங்கையிலிருந்து 5,370 பேர் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அகதிகளாகத் தங்கியுள்ளனர். 1998ம் ஆண்டு 2,100 பேர்மட்டுமே இங்கிலாந்துக்குக் குடியேறினர்.
1998ம் ஆண்டை விட 1999ம் ஆண்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குக் குடியேறியவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தது.
1989ல் 800 பேரும், 1990ல் 840 பேரும், 1991ம் ஆண்டு 600 பேரும், 1992ல் 1000 பேரும், 1993ல் 1940 பேரும், 1994ல் 1860அகதிகளும், 1995ல் 1370 பேரும், 1996ல் 2180 பேரும், 1997ல் 1620 பேரும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குக் குடியேறினர்.
தற்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால், இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கையும் குறையும்.இதனால் இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்து வந்த தமிழர்களின் எண்ணிக்கையும் குறையும்.
மேலும் இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்து வந்தார்கள். லண்டனில் கடந்த வருடம்விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் 10, 000 புலிகள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் என்றார்.
புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இனிமேல் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழர்கள் இங்கிலாந்து எளிதில் செல்ல முடியாது என்றும்,புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டி விட முடியாது என்றும் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications