இந்தியாவில் குறைந்து வரும் கம்ப்யூட்டர் விற்பனை
டெல்லி:
2001ல் இந்தியாவில் கம்ப்யூட்டர் விற்பனை குறைவாக இருக்கும் என டெல்லி சாப்ட்வேர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர்த் ஸ்காச் கம்ப்யூட்டர் அனாலிசிஸ் என்ற அந்த ஆய்வின் விவரம்:
99ம் ஆண்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை மற்றும் ஒய்2கே பிரச்சனையால் கம்ப்யூட்டர் விற்பனை மந்தமாக இருந்தது. ஒய்2கே பிரச்சனை தீர்ந்ததும்கடந்தாண்டு ஆரம்பம் முதல் கம்ப்யூட்டர் விற்பனை அதிகரித்து வந்தது. பின்னர் ஆண்டின் இறுதியில் விற்பனை குறையத் துவங்கியது.
இந்த ஆண்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஆண்டு விற்பனை வளர்ச்சியைவிட பாதியாகவே இருக்கும்.
பெரிய நகரங்களில் அதிகளவில் கம்ப்யூட்டர் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது. எனவே, இப் பகுதிகளில் விற்பனை விகிதம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
வளர்ந்து வரும் நகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான தொலைபேசி இணைப்பு வசதி, மின்வசதி ஆகியவை திருப்திகரமாக இல்லை. இதனால்இப்பகுதிகளில் கம்ப்யூட்டர் உபயோகிக்க விரும்புவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
தற்போது இந்தியாவில் 57 லட்சம் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறைந்து வரும் கம்ப்யூட்டர் விற்பனையை தடுக்க 100 சதவீதம் வருமான வரி விலக்களிக்கலாம் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.