மூப்பனாரின் "சர்ப்ரைஸ் விசிட்
சென்னை:
நீ........ண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வியாழக்கிழமைஆலோசனை நடத்த வந்தார். இதனால் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம்ஏற்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சமீபகாலமாக சத்தியமூர்த்தி பவன் பக்கம் தலைவைப்பத கூட இல்லை. வீடு உள்ள ஆழ்வார்ப்பேட்டையில்தான் தலைவர்கள்,தொண்டர்கள், பத்திரிகையாளர்களுடன் அவர் தேர்தல் கூட்டணிகுறித்து பேசிவருகிறார்.
இதனால் சத்தியமூர்த்தி பவன் வெறிச் சோடிக் கிடந்தது. இந் நிலையில்,வியாழக்கிழமை தனது வீட்டில் குழுமியிருந்த பத்திரிகையாளர்களை கூட்டணிதொடர்பான முடிவு அறிவிக்கவிருக்கிறேன். எனவே அனைவரும் சத்தியமூர்த்திபவனுக்குச் செல்லுங்கள் என்றார்.
இதையடுத்து அனைவரும் அங்கு விரைந்தனர்.
சத்தியமூர்த்தி பவனுக்கு 15 நாட்கள் கழித்து காலடி எடுத்து வைத்தார் மூப்பனார்.தலைவரை அங்கு திடீரென பார்த்த தொண்டர்கள் பரவசமடைந்தனர். பெரும்கோஷத்துடன் வரவேற்றனர். சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த மூப்பனார் நேராக உள்ளேசென்று தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனையில் ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷ்ணன், என்.எஸ்.வி.சித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்குப் பின் வெளியே வந்த மூப்பனாரை பத்திரிகையாளர்கள் ஆவலுடன்சூழ்ந்தனர். ஆனால் வழக்கம் போல எதுவும் பேசாமல், அமைதியாக சென்று விட்டார்மூப்பனார். எனவே, வழக்கம் போல எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றுபத்திரிகையாளர்கள் புரிந்து கொண்டனர் (வேறு வழி?).












Click it and Unblock the Notifications