பிரதமர் உதவித் திட்டத்தின் கீழ் கடன் மோசடி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் வரை கடன் பெற்றுமோசடியில் ஈடுபட்ட பலர் மீது கடன் கொடுத்த வங்கிகள் இப்போது வழக்குத் தொடர்ந்துள்ளன.

ஜாமீன் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுயமாகத் தொழில் செய்யகடனுதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு தொழில் தொடங்க அளிக்கப்பட்ட கடனுதவியில் பலர் தொழில்தொடங்காமல் விட்டதோடு, ஒரு தவணை கூட திருப்பிச் செலுத்தவில்லை.

எனவே, இது குறித்த தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள், தொடர்புடைய முகவரிக்குச் சென்று சோதனை நடத்தினர்.சம்பந்தப்பட்ட முகவரியில் எந்த தொழிலும் நடக்காதது குறித்து அதிர்ச்சியடைந்தனர்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக வாங்கிய கடனுக்கு உத்தரவாதமாக ஜாமீன் அளிக்கப்பட்ட சொத்துக்களைக்கைப்பற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த வகையில் கூட்டாகவும், தனித் தனியாகவும் கடன் வாங்கிய இருபதுக்கும் மேற்பட்டோர்களிடமிருந்து ரூ.50லட்சம் வரை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஒரு வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+