திருவிழாவில் சாதிச் சண்டை

Subscribe to Oneindia Tamil

கரூர்:

கரூர் அருகே நடந்த கோஷ்டி மோதலில் 2 பஸ்கள் சிறை வைக்கப்பட்டன. 5 பேர்கைது செய்யப்பட்டனர்.

கரூர் அருகே உள்ள கடவூரில் அருணகிரிநாதர் திருவிழா நடந்தது. இந்த விழாவிற்குவந்திருந்த இரண்டு சமுதாயத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

திருவிழாவின்போது, ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் ராட்சத ராட்டினத்தில் ஏறி ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருந்தனர். இதனைக் கண்ட மற்றொரு சமூகத்தினர் அவர்களைகண்டித்ததால் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. பின்னர் கோஷ்டி பூசலாக மாறி மோதிக்கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர்.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய 5 பேரைக்கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, ஒரு சமுதாயத்தினர் பஸ்களை சிறை வைத்தனர்.

விழாவையொட்டி விடப்பட்டிருந்த இரண்டு பஸ்கள் மற்றும் ஒரு மினி பஸ் சிறைவைக்கப்பட்டன.

எனவே, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில்ஈடுபட்டு பஸ்களை மீட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கஅங்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+