மூப்பனாரை சந்தித்தார் சோ: அ.தி.மு.கவுடன் கூட்டணி நிச்சயம்
சென் னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தனது கூட்டணி குறித்த குழப்பத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் முடிந்து விட்டது.
கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களதுகட்சியின் முடிவைத் தெரிவிக்கவுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் இழுபறி ஆலோசனைகளால் தேர்தல் கூட்டணி குறித்து குழப்பம்நிலவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு யோசனைகள் மற்றும் விவாதங்களுக்கு இப்போது ஒரு முடிவு ஏற்படும்நிலை உருவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுடன் மூப்பனார் தனது வீட்டில் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன், என்.எஸ்.வி.சித்தன்,சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல இரண்டாம் மட்டத் த லைவர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் இவர்கள் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்துகின்றனர். அதன் பிறகு கூட்டணி குறித்த முடிவை இருகட்சித் த லைவர்களும் சேர்ந்து வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
இந்தப் பேச்சுவார்த் தை குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன்செய்தியாளர்களிடம் கூறு கையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இன்றைய கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முடிவு எடுக்கும் அதிகாரம் மூப்பனாருக்குவழங்கப்பட்டுள்ளது. அவரே கூட்டணி தொடர்பான இறுதி முடிவை எடுத்து அறிவிப்பார் என்றார்.
சோ மீண்டும் சந்திப்பு:
இதற்கிடையே, துக்ளக் பத்திரி கையாசிரியர் சோ மீண்டும் மூப்பனாரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.அரை மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டணி தொடர்பாக சில தகவல்களை மூப்பனாரிடம் சோ தெரிவித்தார்.
அதன் பிறகே கூட்டணி குறித்து மூப்பனார் இறுதி முடிவுக்கு வந்தார் என்று த.மா.கா. வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications