தர்மபுரிக்கு புதிய நீதிமன்றம்
சென்னை:
தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அமைக்க முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தர்மபுரியில் கூடுதல் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அமைக்கப்படும். இந்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு செயல்படத்தொடங்கும் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர், தர்மபுரியில் கூடுதல் முதன்மைமாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் ஏற்கனவே மனுக் கொடுத்திருந்தனர்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றம் கூறுகையில், கிருஷ்ணகிரியில் செயல்படும் நீதி மன்றத்தை தர்மபுரிக்கு மாற்றும்படி தமிழக அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது.
இதற்கிடையே, கிருஷணகிரியில் செயல்பட்டு வரும் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை தர்மபுரிக்கு மாற்றுவதை விட, தர்மபுரியில் தனியாகமாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications