தரையில் மோதும் விமானங்கள்...
டெல்லி:
இந்திய விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அமைச்சர்,கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1970 களில் அதிகளவில் இருந்த விமான விபத்தின் எண்ணிக்கை அதற்கடுத்த ஆண்டுகளில் குறைந்து வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 38 விமானங்களை விமானப்படை இழந்துள்ளது.
கடந்தாண்டு டெல்லி விமானநிலையத்தில் விழுந்து நொறுங்கிய மிக் வகை விமான விபத்திறகுப் பின் மாதம் ஒருமிக் விமானம் விபத்துக்குள்ளாகி வருகிறது.
1970களின் பிற்பகுதியில் வாங்கப்பட்ட இவற்றை மேம்படுத்த தற்போது 1200 கோடி ரூபாய் செலவில் ரஷியநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபகாலத்தில் அதிகரித்து வரும் விமான விபத்துகளுக்கு காரணம் பைலட்களின் கவனக்குறைவு எனவிமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
புதிய பைலட்டுகளுக்கு பயிற்சியளிக்க தேவையான நவீன ஹாக் வகை பயிற்சி விமானங்கள் வாங்க இங்கிலாந்துநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவை அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பின்பே அளிக்கப்படும்எனத்தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.